பிரிந்த காதல் மனைவியிடம், கணவன் கேட்ட அந்த ஒரு வார்த்தை!! மனைவி கூறிய பதிலால் நேர்ந்த சோகம்!!
A suicide in thanjavure orathanadu
கார் டிரைவராக பணியாற்றி வரும் நாகையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25) என்பவரும் துர்கா (20) என்ற இளம்பெண்ணும் 1 ஆண்டுக்கு முன்பு காதலித்து கடந்த திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், துர்கா பிரகாசிடம் கோபித்து கொண்டு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
காதல் மனைவி பிரிந்ததில் இளைஞர் பிரகாஷ் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். எனவே, யோசித்த பிரகாஷ் தனது மனைவி துர்க்காவை சமாதானபடுத்தி அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்து ஒரத்தநாடு சென்றுள்ளார்.
அங்கு சென்று,' இனி நமக்குள் எந்த வித சண்டையும் வராது. நம் வீட்டுக்கு செல்லலாம். என் கூட வா" என துர்காவை அழைத்துள்ளார். ஆனால் துர்கா பிரகாஷுடன் செல்ல மறுத்துள்ளார்.
எனவே, மிகவும் மனம் உடைந்து போன பிரகாஷ் திடீரென தனது மனைவி கண்முன்னரே விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த துர்கா மற்றும் அவரது தந்தை பிரகாசை உடனடியாக மீட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அனால், அவருக்கு அங்கு சிகிச்சை பலனிக்காமல் பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
A suicide in thanjavure orathanadu