#Breaking : சற்றுமுன் வெளியான தகவல்! திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைப்பு?!
Thiruvarur Byelection 2019 : Election Postponed
திருவாரூர் இடைத்தேர்தலை தற்போது நடத்த வேண்டாம் என் மாவட்ட ஆட்சியரின் கருத்து கேட்பு கூட்டத்தில் அனைத்துகட்சி பிரமுகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் வருகிற 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது.
இந்த சூழ்நிலையில், கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் இடைதேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா? முடியாதா? என்பது தொடர்பான அறிக்கையை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்ய, திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இதை தொடர்ந்து, திருவாரூர் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து கட்சி கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. அப்போது, திருவாரூர் இடைத்தேர்தலை தற்போது நடத்த வேண்டாம் என அனைத்துகட்சி பிரமுகர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் தேர்தல் தள்ளி போகுமா என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் இன்று மாலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும். இதையடுத்தே, இடைதேர்தல் நடக்குமா என்பது தொடர்பான விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Thiruvarur Byelection 2019 : Election Postponed