விடுதலை சிறுத்தைக்கு மட்டும் இத்தனை தொகுதிகளா?! கதறும் தோழமை கட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நிறைவு பெற்றுள்ளது.

இதில், விடுதலை சிறுத்தை கட்சி மட்டும் 3 தொகுதிகளை கேட்டு உள்ளது. காஞ்சிபுரம், சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விசிக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த மூன்று தொகுதிகளும் தனி தொகுதிகள் என்பதால் விசிக இதனை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில், ''நாங்கள் போட்டியிட வேண்டிய தொகுதிகளின் விருப்ப பட்டியலை தி.மு.கவிடம் கொடுத்துள்ளோம். நானும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட உள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THIRUMA IN CDM


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->