அதிமுக எம்எல்ஏ தேசிய கொடி ஏற்றும் போது அரங்கேறிய நிகழ்வு : பதறியடித்து ஓடிய பேராசிரியர்கள்!
அதிமுக எம்எல்ஏ தேசிய கொடி ஏற்றும் போது அரங்கேறிய நிகழ்வு
நாட்டின் 69-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று அனைத்து இடங்களிலும்,தேசிய கொடி ஏற்றி வீர வணக்கம் செலுத்தினர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், அதிமுக எம்எல்ஏ தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றி அதன் பிறகு தவறு சரி செய்யப்பட்டது.
பல்லடத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், பல்லடம் தொகுதி அதிமுக எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது தான் தேசியக் கொடி தலைகீழாக கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதனை கண்ட உடனடியாக ஓடிச் சென்ற பேராசிரியர்களும், மாணவர்களும் தேசியக்கொடியை சரி செய்தனர். அதன் பிறகு எம்எல்ஏ நடராஜன் மீண்டும் தேசியக் கொடியை ஏற்றினார்.
English Summary
The debut event of the ADMK MLA's national flag