கனவில் கூட பாஜக தமிழத்தில் காலூன்ற முடியாது!! சபாநாயகர் தம்பிதுரை அதிரடி!! - Seithipunal
Seithipunal


கரூரில் செய்தியாளர்களிடம், "வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக முக்கிய பங்காற்றும் என்பது தவிர்க்க இயலாதது. மேலும், கூட்டணி குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும். இனி தமிழகத்தில் பாஜகவோ, காங்கிரஸோ கனவில் கூட தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றும், 

கஜா புயல் பற்றி பாராளுமன்றத்தில் எடுத்துரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்போது, கஜா நிவாரண பொருட்கள் தமிழகத்திற்கு கிடைக்கும் படி ஏற்பாடு செய்யப்படும். மேலும், திமுக தலைவர் ஸ்டாலின், மத்தியில் ஆளும் மோடி வந்து பார்வையிடவில்லை என்று கூறினாரே, தேசிய முக்கிய கட்சியான காங்கிரஸ் தலைவர் ஏன் வரவில்லை?

கருணாநிதியின் பிறந்த மண்ணான திருவாரூர் மாவட்டத்தை ஸ்டாலின் ஏன் வந்து பார்வையிடவில்லை? மாண்புமிகு இந்திய பிரதமர் மோடி அவர்கள் வரவில்லை என குற்றம் கூற தகுதியற்றவர்கள் இவர்கள். மக்கள் நலனில் அக்கறை இருப்பது போல் காட்டிக்கொண்டு ஊழல் செய்யும் கூட்டணி இது" என்று சபாநாயகர் தம்பிதுரை அதிரடியாக கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thambidurai said never can win pjb in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->