இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியான மாநிலமா? தமிழக அமைச்சர் பேட்டி!
இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியான மாநிலமா? தமிழக அமைச்சர் பேட்டி!
இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியாக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியபோது, 2020ம் ஆண்டுக்குள் சாலை விபத்துக்களை பாதியாக குறைப்பதே இலக்காக கொண் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன. சாலை பாதுகாப்பு விதிகளை மாணவர்களுக்கு ஆரம்ப நிலையில் இருந்தே கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், காவிரியில் வெற்றியை கொண்டாடுவதற்கு அதிமுகவுக்கு மட்டுமே முழு உரிமை இருப்பதாக தெரிவித்தார்.
English Summary
tamil nadu is a peaceful state in india