எடப்பாடியின் ஆட்சி ஓர் ஆண்டை நிறைவு செய்ததே சாதனைதான்!. இதற்கு ஏன் விழா? அதிரடி கேள்வி .
இந்த ஓராண்டுகால சாதனை விழாவே நீங்கள் இவ்வளவு நாள் ஆட்சியில் இருந்ததற்கு தான்
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா- ஓபிஎஸ் பிளவு ஏற்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்று ஓர் ஆண்டு நிறைவு பெற்றதனையொட்டி, அவர்கள் கோலாகல கொண்டாட்டத்துடன் ஓர் ஆண்டு சாதனை மலரை வெளியிட்டு விழாக்களை நடத்தி அதிரடி கிளப்பிவருகின்றனர் இபிஎஸ் - ஓபிஎஸ் குழுவினர்.
இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமியின் ஓர் ஆண்டுகால ஆட்சி குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை செய்தியாளர்கள் சந்தித்தனர் அதற்கு அவர் கூறியதாவது "தமிழகத்தில் பழனிச்சாமி ஆட்சி நடந்ததே சாதனைதான். இதில் ஓராண்டு நிறைவுக்கான சாதனை வேறு ஏன்." என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசும் மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை எனவும் கூறினார்.