பாமக கூட்டணி முடிவு? ஈபிஎஸ் இல்லத்திற்கு முக்கிய புள்ளி விசிட்.. பரபரக்கும் பசுமைவழிச் சாலை.!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் தொற்றிக் கொண்ட நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாமகவை சேர்ந்த முக்கிய புள்ளி சங்கதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மேற்கு தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு நேரடியாக சென்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம் பெறுவதில் இழுபறி நீடித்து வரைவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்த நிலையில் தற்போது பாமக எம்எல்ஏ அருள் நேரடியாக எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் மக்களவை பொதுத் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pmk MLA arul met AIADMK general secretary eps


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->