அனல் பறக்கும் தேர்தல் களம்.! நாளை முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் - தேமுதிக தலைவர் பிரேமலதா.!
nomination file from tomarrow for parliment election dmdk leader premalatha info
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை தேசிய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். இது குறித்து பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-
"பதினெட்டாவது 2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பாராளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 19.03.2024 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11.00 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 20.03.2024 புதன்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.
மேலும், பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 21.03.2024 வியாழக்கிழமை அன்று காலை 10மணி அளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
nomination file from tomarrow for parliment election dmdk leader premalatha info