மோடி காலை ஆரம்பித்து மாலை வரை பொய் பேசுவார் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்தவகையில், மக்களவை தேர்தலுக்கான மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. நான்காம் கட்ட வாக்குபதிவிற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்குவங்கம் ஆரம்பாக் பகுதியில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டார்.

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரான மிதாலி பாக்கை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி பேசுகையில், மேற்கு வங்க மக்களை இழிவு படுத்துவதை பாஜக வழக்கமாக செய்து வருகிறது. பணம் கொடுத்து தவறான பாலியல் வன்கொடுமை புகர்களை கூறி சந்தோஷ்காலியின் பெண்களை பாஜக அவமதித்து உள்ளது. பிரதமர் மோடி காலையில் ஆரம்பித்து மாலை வரை பொழிகளை பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை தேர்தல் சட்டம், சிறுபான்மையினர் மலைவாழ் மக்கள் பிற்படுத்த மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும். பாஜக ஒரு ஓட்டுக்கு 5000 முதல் 15,000 கொடுத்து வாக்குகளை வாங்குகிறது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi starts lying from morning till evening Mamata Banerjee alleges


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->