தேர்தல் பரபரப்புக்கு மத்தியில்.. மும்பை புறப்பட்டார் மு.க ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி வடகிழக்கு மாநிலத்தில் தொடங்கி மும்பை வரை ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். 

பல மாநிலங்கள் வழியாக நடைபெற்ற இந்த யாத்திரையின் நிறைவு விழா மும்பையில் இன்று நடைபெறுகிறது. 

மும்பை தாதுரியில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி யாத்திரையின் நிறைவு விழா நடைபெறுகிறது. 

இந்த நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அந்த அழைப்பின் அடிப்படையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் இன்று தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டுள்ளார். 

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்ளும் முதல் கூட்டம் என்பதால் ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி யாத்திரையின் நிறைவு விழா மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin visit Mumbai today for participating in Rahul Gandhi yatra


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->