நிதி வழங்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது.!! பாஜகவை ரவுண்டு கட்டிய கே.பி முனுசாமி.!!
kp munusamy critiziced bjp annamalai
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த லக்கபத்தனப்பள்ளியில் புதிய திட்ட பணிகளை அதிமுக துணை பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி முனுசாமி தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் 'காமராஜரை மோடியுடன் மட்டும் அல்லாமல், தற்கால தலைவர்கள் யாருடன் ஒப்பிட்டு பேச முடியாது. காமராஜர் மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்த கர்மவீரர், அவருடன் தற்போதைய தலைவர்களை ஒப்பிட்டு பேசுவது சரியாக இருக்காது.
தமிழகத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் மோடி கலந்து கொண்டு, முதலீடு செய்யுங்கள், இது பாதுகாப்பான மாநிலம் என கூறியிருந்தால் பாஜக தலைவர் அண்ணாமலை கூறும் கருத்துகளை வரவேற்பேன். ஆனால் மோடி, குஜராத்துக்கு தொழில்முனைவோரை அழைத்து பேசுகிறார். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியை வழங்காமல் வஞ்சிக்கிறது.
தமிழ்நாட்டை பற்றி விமர்சனம் செய்ய அண்ணாமலைக்கு எவ்வித தார்மிக உரிமையும் இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களைவிட தமிழகம், மக்கள் நல்வாழ்வு துறை, விவசாயம், கல்வி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலம் என ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலங்களில் மத்திய அரசே பாராட்டி விருதுகள் வழங்கி உள்ளது. இதனை மறைத்து அண்ணாமலை செல்லும் இடங்களில் தான்தோன்றி தனமாக பேசி விமர்சனம் செய்வது நாகரிகமான அரசியல் இல்லை" என பாஜகவையும் அண்ணாமலையையும் கடமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
kp munusamy critiziced bjp annamalai