வேலூர் மக்களவை தேர்தல் இரத்து எதிரொலி.! வெளியானது அடுத்த அறிவிப்பு.!!
in vellore no voting area announced leave has been Withdraws
இந்தியாவிற்கான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து அரசியல் கட்சிகள் தங்களுக்கான கொள்கைகள் ஒத்துப்போக கூடிய கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து தீவிர பிரச்சாரத்திலும்., வாக்கு சேகரிப்பில் ஏற்பட்டு வந்தனர். மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதை சோதனை செய்ய பறக்கும் படையினர் தீவிர முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில்., கடந்த மார்ச் 30ம் தேதி துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பிறகு மொத்தமாக ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 10ம் தேதி வருமானவரித்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல்துறையினர், கதிர் ஆனந்தன் மற்றும் 2 திமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருந்ததால் வேலூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நிறுத்த உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்த நிலையில்., நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில்., வேலூர்., அணைக்கட்டு., கே.வி.குப்பம்., வாணியம்பாடி உள்ளிட்ட நான்கு பகுதிகளில் விடுக்கப்பட்ட அரசு விடுமுறையானது இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்., வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர்., குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் அறிவித்தபடியே நடைபெறும் என்று தெரிவித்தார்.
English Summary
in vellore no voting area announced leave has been Withdraws