பாஜகவை விடக்கூடாது.. சொல்லி அடிக்கும் எடப்பாடி.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பாக பிரித்தாலும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள பாஜகவுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என கூறியுள்ளார். 

மேலும் பாஜக தேசிய கட்சியாக இருந்தாலும் மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியில் இறங்கி அதிமுக குறித்து பொய் பிரச்சாரம் செய்வதையே முழு நேரமாக செய்து கொண்டிருக்கின்றது. 

அதிமுகவை பிளவுபடுத்த பாஜக எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து ஒன்றாக இருக்கிறோம். வன்முறை வெறியாட்டங்களையும் வடக்கே இருந்து ஏவப்பட்ட விஷயம் அன்புகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 

நாம் வம்பு சண்டைக்கு போவதில்லை ஆனால் வந்த சண்டையை விடுவதில்லை என்று அதிமுக எனும் சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பதை நம்மை சீண்டி பார்ப்பவர்கள் உணர்ந்து கொள்ளட்டும். 

பாஜக சில திடீர் தலைவர்களை ஊக்குவித்து நம்மை சீண்டி வருகிறது. அவர்களுக்கு சரியான பாடத்தை கற்பிக்கும் வகையில் அதிமுக தொண்டர்கள் தயங்காமல் செயல்பட வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS lettered this election lesson to BJP


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->