ரிசல்ட் வரலன்னா "பதவி போய்விடும்".. எச்சரிக்கும் திமுக தலைமை.!!
DMK warning to admins on election result
நிர்வாகிகளுக்கு டோஸ் விட்ட திமுக தலைமை.?
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி நெருங்கி உளள சூழலில் திருப்பூர் பொள்ளாச்சி ஈரோடு நாமக்கல் கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி ஆகிய ஆறு தொகுதிகளில் திமுகவினர் சரியாக பணியாற்றுவதில்லை என திமுக தலைமைக்கு உளவுத்துறை எச்சரிக்கை மணி அடித்துள்ளது.
இதனால் முதல்வர் அலுவலகத்தில் இருந்து டோஸ் விடவே அந்த தொகுதிகளில் உள்ள திமுகவினர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனராம்.
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதல்வரின் மருமகன் ஈரோட்டில் முகாமிட்டு கள நிலவரம் குறித்து ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. திமுக தலைமை சுட்டிக்காட்டியும் ஏற்கனவே ஈரோடு இருந்த திமுக தலைமை சுட்டிக்காட்டியும் ஏற்கனவே இருந்த நிலையிலே தான் தற்போது ஈரோடு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் மதிமுக போட்டியிட்ட நிலையில் இந்த தேர்தலில் திமுக நேரடியாக ஈரோடு தொகுதியில் களம் காண்கிறது. இதனால் கடுப்பான முதல்வரின் மருமகன் "தலைவர் ரொம்ப கோபமாக இருக்கிறார் எதிர்பார்த்த தேர்தல் முடிவு வரவில்லை என்றால் பதவி பறிபோகிவிடும் என நேரடியாகவே எச்சரிக்கை விடுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் முனுமுனுக்கின்றன.
English Summary
DMK warning to admins on election result