திமுக தொண்டர்களுக்கு திடீர் அதிர்ச்சி..!! கலங்கி கிடக்கும் அதிமுகவிற்கு அடிகலங்க வைக்கும் நிகழ்வு..? - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா, கருணாநிதி என்ற இருபெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழக அரசியல் கட்டவிழ்ந்த களையை போல திமிறிக்கொண்டு ஓடுகிறது.

அடக்கி ஆள சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் மக்கள். என்னதான் அடக்க நினைத்தாலும் அதற்குள் செய்யும் அட்டூழியங்களை எங்கே சொல்லி அழுவது என்று தெரியாமல் மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

கடந்த ஒருவருடமாக கருணாநிதி எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் கட்சி பணிகளிலும் ஈடுபடாமல் செயல்பாடற்ற நிலைக்கு சென்று விட்டார்.

இனி எதிர்த்து நிற்க பெரிய தலைகள் இல்லை, நாம் ஆடுவது தான் ஆட்டம் என்று குதூகளித்து வரும் நிலையில், ஒருவருடத்திற்கு பிறகு கருணாநிதி இன்று பொது வெளியில் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முரசொலி பவள விழா கண்காட்சி கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வரை வரை நடைபெற்றது.

கடந்த வாரத்தில் நடந்து முடிந்த அந்த கண்காட்சிக்கு செல்லாத கருணாநிதி அனைவரும் வியக்கும் வண்ணம் தற்போது திடீர் விசிட் அடித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வந்தார். 

ஒரு ஆண்டாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்காத கருணாநிதி முதல் முறையாக முரசொலி அலுவலகம் வந்து கண்காட்சியை பார்வையிட்டார். 

கருணாநிதியுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் முரசொலி அலுவலகம் வந்தார்.  ஓராண்டுக்குப்பிறகு பொதுவெளியில் கருணாநிதி வருகை புரிந்துள்ளார். திமுக தொண்டர்கள் இடையே அதிர்ச்சியும், ஆச்சர்யமும் கலந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karunanidhi is well and active. This is the photo taken at his house now. Don't believe, don't spread rumours," DMK leaders shared his picture


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->