இந்தியாவில் அறிவிக்கப்படாத "எமர்ஜென்சி".. கொந்தளிக்கும் திமுக தரப்பு..!!
DMK alleged unofficial emergency in India
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா கூட்டணி கட்சிகளில் ஆர்ப்பாட்டத்தில் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டார். அந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முறையை வாசித்த திருச்சி சிவா "தோல்வி பயம் காரணமாக மத்திய அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை அடுத்தடுத்து கைது செய்து வருகிறது.
முதலில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமாலாக்கத்துறை கைது செய்த நிலையில் இப்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளனர். இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களை கைது செய்தாலும் ஒன்று செய்ய முடியாது.
மோடி ஆட்சியில் இந்தியா முழுவதும் அறிவிக்கப்படாத அவசரநிலை அமலில் உள்ளது. கெஜ்ரிவாலில் பிரச்சாரம் மக்களை அதிக அளவில் கவரும் என்பதால் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்குவதற்கு சிபிஐ வருமானவரித்துறை அமலாக்குத்துறை போன்றவற்றை தவறாக பயன்படுத்துகிறது. பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும். அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவார்" என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினின் உரையை திருச்சி சிவா அனைவரின் முன்னிலையிலும் வாசித்தார்.
English Summary
DMK alleged unofficial emergency in India