சசிகலாவை மொத்தமாக புறக்கணித்த அதிமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரது தலைமையில் பாஜக இல்லாமல் மக்களவை பொதுத் தேர்தலை சந்தித்துள்ளது அதிமுக. அதேபோன்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தாலும் பொதுச் செயலாளராக இருந்து வரும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர் மீட்பு குழுவை துவங்கினார். 

டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று மக்களவைப் பொதுத் தேர்தலை சந்தித்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.ப‌ன்னீர்செல்வம்‌ ராமநாதபுரம் தொகுதியிலும் டிடிவி தினகரன் தேனி தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர். 

இதுக்கிடையே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா தன்னை பொதுச்செயலாளராக கூறிக்கொண்டு மீண்டும் அதிமுகவை ஒருங்கிணைக்கப் போவதாக கூறியுள்ளார். மக்களவை பொதுத் தேர்தலின் போது யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் அமைதியாக இருந்த சசிகலா தற்போது அதிமுகவினர் அனைவரும் விண்ணப்ப படிவம் ஒன்றை பூர்த்தி செய்து தனக்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். 

அதிமுக தொண்டர்கள் அந்த படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்கப் போவதாக கூறி வரும் சசிகலா தற்போது வரை வேறுபாடு பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் என யாரிடமும் பேச்சுவார்த்தை எவ்வாறு அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்க முடியும் என என கேள்வி எழுப்பும் அரசியல் விமர்சகர்கள் இதன் மூலம் அதிமுக தொண்டர்கள் சசிகலாவை முழுமையாக புறக்கணித்து உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK cadres refused sasikala statement


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->