கட்சி தாவ தயாரான அதிமுக எம்எல்ஏக்கள்.......ஸ்டாலினிடம் ரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட முக்கிய புள்ளி! - Seithipunal
Seithipunal


திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அவரது கட்சியினர் உட்பட அனைத்து தரப்பினரும் வைக்கும் விமர்சனங்கள் என்னவென்றால், அசமந்தமாக அரசியல் செய்கிறார் என்றும் ஜெ., மரணத்துக்கு பிறகும் ஏற்பட்ட சாதக சூழலை பயன்படுத்தி தி.மு.க.வின் ஆட்சியை அமைக்க தவறிவிட்டார். தலைவர் கருணாநிதி மட்டும் தற்போது அரசியல் களத்தில் இருந்திருந்தால் இந்த நேரம் அவர் கோட்டையில் குடியேறியிருப்பார் என்பதும் தான். 

ஆனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் விளக்கமான பதில், மக்களின் அபிமானத்தை பெற்று மட்டுமே திமுக ஆட்சிக்கு வரும் என்றும் திமுக தலைவரான கலைஞரும் அதனையே விரும்புவார் என்பதும் தான். 

மு.க.ஸ்டாலின் மீது அந்த அசமந்த அரசியல்வாதி என்ற விமர்சனம் தொடர்ந்து கொண்டிருந்தாலும், அதற்கு அவர் அளிக்கும் அதே பழைய விளக்கமும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. 

இந்த நிலையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஒரு மர்மம் ஒன்றை உடைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவரது அத்தகைய புதிர் வார்த்தைகளுக்கு விளக்கவுரை எழுதும் விமர்சகர்களின் வாக்கியங்கள் பகீரென்றிருக்கின்றன. 

அதாவது ஓ.பி.எஸ் தர்மயுத்தம் என்ற பெயரில் கட்சியை உடைத்தபோது கணிசமான எம்எல்ஏக்கள் அவரது பக்கம் சாய்ந்தனர். அப்போது இ.பி.எஸ் அணியானது மெஜாரிட்டியை இழக்கும் சூழல் உருவானது. ஓ.பி.எஸ்ஸை நம்பி பக்கம் சாயாமல் இருந்த அவருடைய விரோதி எம்எல்ஏக்கள் இ.பி.எஸ்ஸுடனும் ஒட்டாமல் அமைதிகாத்து தனி நிலை எடுத்தபடி இருந்தனர். 

அந்த நேரத்தில் தான் எப்படியாவது ஆட்சியை கவிழ்த்து, கோட்டையில் கொடி நாட்டும் வேளைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார். சாமர்த்தியமாக செயல்பட்டு ஆட்சியை கலைக்க அவர் யோசித்த வேளையில் தான், அதிமுகவின் எம்எல்ஏவாக இருக்கும் முக்கிய நிர்வாகி ஒருவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்திருக்கிறார். 

அப்போது அவர், திமுகவுக்கு ஆதரவு தரும் வகையில் தாங்கள் நடந்து கொள்வதாகவும் ஆனால் அதற்கு உடன்படும் எம்எல்ஏக்களுக்கு மிகப்பெரிய ஆதாயம் ஒன்றை மு.க.ஸ்டாலின் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார். 

அவர்கள் கேட்ட அந்த ஆதாயமானது திமுகவை பொறுத்தமட்டில் அவ்வளவு பெரிய அதிர்ச்சிகரமான தொகையில்லைதான் என்றாலும் கூட அவரை அனுப்பிவிட்டு பின்னர் கிட்டத்தட்ட நான்கைந்து நாட்களாகவே இதைப் பற்றியே யோசித்த மு.க.ஸ்டாலின் திடீரென ஒரு அதிரடி முடிவுக்கு வந்துள்ளார். 

என்னவென்றால், தங்களுக்கு வாழ்க்கை தந்த அதிமுகவின் ஆட்சியை குழப்பமான சூழலில் கவிழ்த்துவிட்டு, எனினும் பரம எதிரியான நம்முடன் கைகோர்க்க நினைக்கும் இவர்களை நம்பி நாம் ஆட்சியமைத்தால், நாளைக்கு எவ்வாறு மக்கள் நலத் திட்டங்களை இவர்களை நம்பி இயற்ற முடியும்? மக்கள் நல செயல்பாடுகளுக்கெல்லாம் இவர்கள் அக்கறையுடன் கைகொடுக்க மாட்டார்களே.

அப்படி ஒன்றும் இவர்களை தங்களது கட்சியில் இணைத்துக் கொண்டு ஆட்சி அமைக்க தேவையில்லை. தேர்தல் வரும் சமயத்தில் பார்த்துக் கொள்ளலாம். என்று அந்த முயற்சியை அப்படியே தவிர்த்துவிட்டுள்ளார் ஸ்டாலின். 

இவ்வாறு நடைபெற்ற அந்த சம்பவத்தைத்தான் தற்போது நடைபெற்ற திருவள்ளூர் மாவட்ட பொதுக்கூட்டத்தில் நீங்கள் ஏன் இந்த ஆட்சியை கவிழ்க்கவில்லை என்று கேட்கிறார்களே? கவிழ்க்கலாம். ஆனால் அப்படிப்பட்டவர்களை தாங்கள் விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தால், மக்களுக்கான திட்டங்களைத் தீட்ட முடியுமா? என்று பேசியிருக்கிறார் ஸ்டாலின். 

இத்தகைய பேச்சின் மூலம் அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் தன்னிடம் விலை போக தயாரானதை வெளிப்படையாகவே கொட்டிதீர்த்து விட்டார். என்று கூறுகிறது விளக்கவுரை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mlas ready to jump dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->