ஊழல் செய்யவில்லை என்று நிரூபிக்க சென்ற எம்.எல்.ஏ! பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய கட்சியினர்!
ysr congress mla was attacked by telugu desam party members
ஆந்திர மாநிலத்தின் புட்டபர்த்திலுள்ள சாய்பாபா கோவிலுக்கு நடைபயணமாகச் சென்ற ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களின் மீது தெலுங்கு தேச கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலத்தின் புட்டபர்த்தியில் எம்எல்ஏ வாக இருப்பவர் ஓய்எஸ்ஆர். காங்கிரசைச் சார்ந்த ஸ்ரீதர் ரெட்டி என்பவர் ஆவார். இவர் மீது தெலுங்கு தேசம் கட்சியினர் ஊழல் சம்பந்தமான புகார் வைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து தான் இந்த ஊழலும் செய்யவில்லை என்பதை நிரூபிப்பதற்காக புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு நடை பயணமாக சென்று சாய்பாபாவின் முன் சத்தியம் செய்ய சென்றிருக்கிறார் ஸ்ரீதர் ரெட்டி.
அப்போது இவரையும் இவரது ஆதரவாளர்களையும் வழிமறித்த தெலுங்கு தேசம் கட்சியினர் கற்கள் கம்பு தேங்காய் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கினார். இதற்கு எதிர் தாக்குதல் தெரிவிக்கும் விதமாக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினரும் தெலுங்கு தேசம் கட்சியினரை தாக்கினர் இதனால் அப்பகுதியில் போர்க்களம் போல பரபரப்பாக காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடியடி நடத்தி கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர் அதன் பிறகு நிலமை கட்டுக்குள் வந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது .
English Summary
ysr congress mla was attacked by telugu desam party members