பொதுமக்களே உஷார்.. செல்போனால் கண்பார்வை இழந்த பெண்.!
Women lose eye Power due to smartphone use in Hyderabad
இருட்டில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் இளம் பெண் ஒருவரின் கண் பார்வை பறிபோயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாமல் யாரும் இல்லை. ஒரு காலத்தில் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்திய செல்போன்களுக்கு இன்று சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர்.
இதனால் ஏற்படும் பல்வேறு விளைவுகள் குறித்து மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக செல்போன் அதிக நேரம் பயன்படுத்தினாலும், இருட்டில் பயன்படுத்துவதாலும் கண் பார்வை பறிபோய்விடும் என எச்சரித்துள்ளனர்.
அந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தினமும் தனது வீட்டில் இருட்டில் ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இழந்த பார்வையை திரும்பவும் மீட்டெடுக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதன்படி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் இருட்டில் அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வந்துள்ளார். அதனால் தான் அவருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Women lose eye Power due to smartphone use in Hyderabad