துப்பாக்கி முனையில் சிறுமியை சீரழித்த கொடூரர்கள்! வீடியோ எடுத்து மிரட்டல்!!
துப்பாக்கி முனையில் சிறுமியை சீரழித்த கொடூரர்கள்! வீடியோ எடுத்து மிரட்டல்!!
சிறுமியை துப்பாக்கி முனையில் 3 வாலிபர்கள் பலாத்காரம் செய்து, அந்த சம்பவத்தை அவர்கள் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். அந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 14 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் 3 வாலிபர்கள் பலாத்காரம் செய்தனர். உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகர் அருகியுள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் வீடு அருகேயுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார்.
அப்போது அங்கிருந்த 3 வாலிபர்கள் சிறுமியை அருகேயுள்ள வீட்டிற்குள் தூக்கி சென்றனர். அங்கு துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அந்த சம்பவத்தை அவர்கள் வீடியோவாகவும் பதிவு செய்தனர். இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்வதாகவும் மிரட்டி உள்ளனர். இது குறித்து சிறுமி தகவல் தெரிவித்ததன் பேரில் அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக 3 பேர் மீதும் பலாத்கார செய்ததாக காவல் துறையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
the tormentors that ruined the girl at gunpoint