சந்திராயன்-3 குறித்து முக்கிய அப்டேட் தந்த சோம்நாத்! - Seithipunal
Seithipunal


நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரன்-2 விண்கலத்தை இந்தியா கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. அப்பொழுது சந்திராயன் விண்கலத்தின் லேண்டர் கலன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் சென்று வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. அதேசமயம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. 

நிலவின் மேற்பகுதியை ஆய்வு செய்து பல்வேறு புகைப்படங்களை ஆர்பிட்டர் அனுப்பி வைத்தது. ஏற்கனவே ஆர்பீட்டர் நிலவை சுற்றி வருவதால் சந்திராயன்-3 திட்டத்தின் மூலம் லேண்டர் மற்றும் ரோவர்  மட்டும் அனுப்ப திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறுகையில் "சந்திராயன்-3 திட்டம் தயாராக உள்ளது. எதிர்பாராதவிதமான தவறுகள் நேர்ந்தாலும் அதற்கு மாற்றாக மற்றொரு திட்டம் உடனே செயல்பாட்டுக்கு வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சந்திராயன்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் துவங்க உள்ளோம். இந்த திட்டம் குறித்தான முதல் கட்ட பரிசோதனை அடுத்த ஆண்டு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Somnath gave an important update on Chandrayaan3


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->