இந்தியாவின் கௌரவத்தை சர்வதேச அரங்கில் குலைத்துள்ளார் ராகுல் காந்தி!. மத்திய அமைச்சர் கண்டனம்!. - Seithipunal
Seithipunal



ரபேல் விவகாரம் தொடர்பில் விசாரணை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் நடுவே குளிர்கால நாடாளுமன்ற தொடரின் இன்றைய கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

மேலும் ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் முழக்கம் எழுப்பினர். 

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடந்த பல மாதங்களாக தொடர்ந்து தவறாக பேசி வந்த ராகுல் உட்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலர் ராம் மாதவ் கூறியுள்ளார்.

                    

மேலும், மக்களை தவறாக உபயோகிக்க முயற்சித்த ராகுல்காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். 

அவர் கூறுகையில், அரசியல் ஆதாயத்திற்காக பொதுமக்களை தவறான வழியில் திசைதிருப்ப காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முயற்சித்துள்ளார். ராகுல்காந்தி இந்தியாவின் கௌரவத்தை சர்வதேச அரங்கில் குலைத்துள்ளார். இந்த தவறுகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் நாட்டு மக்களிடமும் ராகுல்காந்தி கட்டாயமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajnath sing talk about Rahul gandhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->