வாக்கு சாவடிகளில் கூட்டமாக இருக்குமா?.. வீட்டில் இருந்தபடி அறியலாம்! எப்படி தெரியுமா?
Polling station many people standing find
இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான ஓட்டு பதிவு இன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தலில் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் பொதுமக்கள் வாக்கு சாவடிகளில் கூட்டமாக இருக்குமா எப்போது செல்லலாம் என்ற எண்ணத்தில் இருப்பார்கள்.
அவர்களுக்கு உதவி செய்யும் விதமாக தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது உங்களது வாக்கு சாவடிகளில் வாக்களிக்க எத்தனை பேர் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை வீட்டில் இருந்தபடி தெரிந்து கொள்ளலாம்.
v
அதற்கு இங்கே உள்ள க்யூ ஆர் கோடு-ஐ ஸ்கேன் செய்தோ அல்லது https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளத்தில் உங்களது வாக்குச்சாவடிகளின் விவரங்களை பதிவு செய்தோம் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த நடவடிக்கை, வாக்குச்சாவடிகளில் ஏற்படும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
English Summary
Polling station many people standing find