பல மாதங்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 232வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் என்று விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை 94.24 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குஜராத் தேர்தல் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல் காரணமாக கடந்த மே 21 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென பெட்ரோல் மீதான கலால் வரியை 9 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார். அதன் பிறகு பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் என்று விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு டீசல் மீதான வாட் வரியை ரூ.3 உயர்த்தியும், பெட்ரோல் மீதான வாட் வரியை 55 காசு குறைத்தும்  உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.கவை வீழ்த்தி சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்த நிலையில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட உடனே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் புதிய விலை அமல்படுத்தப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petrol and diesel price changed after many months


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->