நோட்டாவுக்கே டப் கொடுக்கும் தேர்தல் மன்னர்களுக்கு கிடுக்குப்பிடி....  சுப்ரீம் கோர்ட்டில் மனு ! - Seithipunal
Seithipunal


ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு என்றாலும், சில தேர்தல் மன்னர்கள் தேர்தலில்  போட்டியிடுவதையே வேலையாக  வைத்துக்கொண்டு ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடுகின்றனர். 

போட்டியிடும் வேட்பாளர்களில் யாரையும் மக்களுக்கு பிடிக்க வில்லை என்றால், போட்டியிடும் அனைவருக்கும் எதிராக வாக்களிக்க  ‘நோட்டா’ என்ற வசதி  தேர்தல் ஆணையத்தால் அறிமுகம் செய்யப்பட்டது.  இது வாக்காளர்களின் உரிமையை உறுதிபடுத்துவதற்காக  செய்யப்பட்டது.  மேலும், கடந்த 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் விதித்த  உத்தரவின்படி தேர்தலில் இடம்பெறும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ‘நோட்டா’வுக்கென தனிச் சின்னம் பதித்து அதற்கான பொத்தானும் இணைக்கப்பட்டது. 

இந்நிலையில், மாணவர்களிடையே, தன்னம்பிக்கையூட்டும்  பேச்சாளரும் எழுத்தாளருமான ஷிவ் கெரா  என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தலில் ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்து அதைவிட குறைவாக  வேட்பாளர்கள் பெற்றால், அந்த இடத்தில் மீண்டும்  தேர்தல் நடத்த வேண்டும்.

அதோடு மட்டுமல்லாமல்,  போட்டியிடும்  தொகுதியில் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெறும் வேட்பாளரை  அதே தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட அனுமதிக்க கூடாது என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NOTA candidates shoud not allowed to contest in bye-election


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->