தீவிபத்தின் போது உயிரை துச்சமென நினைத்து 10 பேரை காப்பாற்றிய இளைஞன்.!! பாராட்ட மனமிருப்பவர்கள் பாராட்டலாம்.!!
தீவிபத்தின் போது உயிரை துச்சமென நினைத்து 10 பேரை காப்பாற்றிய இளைஞன்.!! பாராட்ட மனமிருப்பவர்கள் பாராட்டலாம்.!!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அந்தேரியில் மத்திய அரசிற்கு சொந்தமான மருத்துவமனை 5 மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள நான்காவது மாடியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தானது சிறிது நேரத்தில் மளமளவென எரியத் தொடங்கியதன் காரணமாக நான்காவது தளம் முழுவதும் பரவியதன் காரணமாக அந்த தளத்தில் இருந்து கரும்புகை பரவ துவங்கியது. மேலும்., இந்த தீவிபத்தை அறிந்த மருத்துவர்கள்., ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பதறியபடி உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
உடல் நலம் சரியில்லாமல் கடுமையான நிலையில் அனுமதி செய்யப்பட்டிருந்த நோயாளிகள் அனைவரும் படுகைகளில் இருந்து எழுந்திருக்க இயலாமல்., காப்பாற்ற கூறி கூச்சலிட்டனர். மேலும்., அங்கிருந்த பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக பல நோயாளிகள் தப்பிக்க வழியின்றி பரிதாபக உயிருக்கு போராடி துடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும்., காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெருமளவு சிரமமடைந்தனர். சுமார் 12 தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர மிகுந்த சிரமப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஒரு புறம் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடிக்கொண்டு இருந்த நிலையில்., மருத்துவமனையில் உயிருக்கு போராடியவர்களை மீட்பதற்க்காக அதிகாரிகள் விரைந்தனர். மருத்துவமனையில் இருந்த பலருக்கு தீக்காயமும்., பலர் மூச்சு திணறலின் காரணமாக பலர் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அவர்களை உடனடியாக மீட்டனர்.
தீவிபத்தில் பாதிப்படைந்த அனைவரையும் அவசர ஊர்தியின் மூலமாக அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும்., மயக்க நிலையில் இருந்தவர்களை மருத்துவர்கள் செய்த சோதனையிலும்., தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் மொத்தம் 10 பேர் தற்போது வரை பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 175 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்., 116 நபர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் காரணத்தால் மேலும் உயிர் பலி அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில்., அங்கு தீ விபத்து ஏற்படும் போது சம்பவ இடத்தில் இருந்த டெலிவரி பாயாக பணியாற்றிய சித்து ஹூமானபாத் என்பவர் மருத்துவமனையில் தீ பற்றி எரிவதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார். தீ மளமளவென பரவுவதை கண்ட இவர்., சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தவுடன் அவர்களுடன் இணைந்து சுமார் 10 உயிர்களை காப்பாற்றினார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது., மருத்துவமனையில் தீவிபத்து ஏற்படும் போது நான் சம்பவ இடத்தில் இருந்தேன். தீ வேகமாக பரவியதை கண்டு அதிர்ச்சியடைந்த நான் தீயணைப்பு துறையினரின் உதவியுடன்., மருத்துவமனையின் வெளிப்புறமாக தீயணைப்பு படையினர் தயார் செய்திருந்த ஏணியின் மூலமாக மேல் தளத்திற்கு விரைந்து கோடரியின் உதவியுடன் ஜன்னலை உடைத்து அங்கிருந்த 10 நோயாளிகளை மீட்டேன் என்று கூறினார்.
தீவிபத்து நடைபெறும் போது உயிரை துச்சமென நினைத்து மீட்பு பணியில் ஈடுபட்ட இவரை பாராட்டி வருகின்றனர்.
English Summary
mumbai hospital fire accident hero boy