புயல் நிவாரணத் தொகை - மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் முத்துசாமி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணத் தொகை கிடைக்க வாய்ப்புண்டு என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இந்த மழைநீரை வெளியேற்றும் பனி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் முத்துசாமி சென்னை மாங்காட்டில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது பெய்துள்ள மழையின் அனுபவத்தை வைத்து முதலமைச்சர், பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க உள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் ஒரே மாதிரியாக தான் பார்க்கப்படுகிறது. அதனால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணத்தொகை கிடைக்க வாய்ப்பு உண்டு என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister muthusamy press meet in chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->