ராணுவ வீரர்கள் 2 பெண்களை நைஸாக ஏமாற்றி ரயில் பெட்டிக்குள் பாலியல் பலாத்காரம்.!! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலத்தில்  ராணுவ வீரர்களிருந்த ரயில் பெட்டிக்குள்   இரண்டு பெண்களை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் ஜான்ஸி நகரில் உள்ள வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமி பாய் ரயில் நிலையத்தின் ஏழாவது  நடைமேடையில் ரயில் நின்று  கொண்டிருந்தது.

இரண்டு பெண்கள் தங்கள் உறவினர்களை சந்திப்பதற்காக ரயில் நிலையம் வந்திருக்கிறார்கள். அந்த இரண்டு பெண்களும் தனியாக வந்திருப்பதை அறிந்த ராணுவ வீரர் ஒருவர் அவர்களிடம் நைஸாக பேச்சு கொடுத்திருக்கிறார். தன்னுடைய செல்போன் வேலை செய்யவில்லை உங்களது செல்போனை கொடுங்கள் ஒரு கால் பேசி விட்டு தருகிறேன் என கேட்டிருக்கிறார். அந்தப் பெண்மணியும் ராணுவ வீரர் தானே என்ற நம்பிக்கையில் கொடுத்துள்ளார்.

செல்போனில் பேசியவாறு நடந்த அந்த ராணுவ வீரர் அவரிருக்கும் பெட்டியில் ஏறி இருக்கிறார். அந்தப் பெண்களையும்  தங்களது பெட்டியில் அமருமாறு கூறியிருக்கிறார்கள். அவர்களும் சிறிது தயங்கினாலும் சரி ராணுவ வீரர்கள் தானே என்ற நம்பிக்கையில் அந்த வீரர்கள் அமர்ந்திருந்த பெட்டியில் அமர்ந்திருக்கின்றனர். அந்த ரயில் பெட்டியிலிருந்த மேலும் இரண்டு ராணுவ வீரர்களும் இந்த வீரரும் இணைந்து அந்த இரண்டு பெண்களையும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

ரயில் பெட்டியிலிருந்தவாறே அவசர உதவியை நாடிய அந்த பெண்கள்  ரயில்வே துறை காவலர்களை தொடர்பு கொண்டுள்ளனர். பின்பு ரயில்வே  காவலர்களும் மாநில காவல் துறையும் இணைந்து இரண்டு ராணுவ வீரர்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஒரு ராணுவ வீரர் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராணுவத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

military men sexually assauted two women inside train two got arrested one person run away


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->