ம.பி || தண்ணீரில் தத்தளித்த மனைவி.! கணவர் செய்த கொடூர செயல் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ம.பி || தண்ணீரில் தத்தளித்த மனைவி.! கணவர் செய்த கொடூர செயல் - நடந்தது என்ன?

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் தனது மனைவியிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டுள்ளார். மேலும், தனது மனைவியை கயிறில் கட்டி கிணற்றில் தள்ளி சித்ரவதை செய்துள்ளார். 

கடந்த மாதம் நடைபெற்ற இந்தச் சம்பவம் தற்போது தான் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ராகேஷ் சித்ரவதை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், இந்த வீடியோ ஆதாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் ராகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for pushed wife to water in madhya pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->