மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்! வேண்டி விரலை துண்டித்த மோடி பக்தர்!
KARNATAKA BJP MODI Fan cut own finger
கர்நாடகாவில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று, தனது விரலை துண்டித்து பிரார்த்தனை செய்த, பிரதமர் மோடியின் தீவிர பக்தரான வர்ணேகர் என்பவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா, சோனார்வாடாவை சேர்ந்தவர் வர்ணேகர், பிரதமர் மோடியின் தீவிர பக்தரான இவர், பிரதமர் மோடிக்காக கோவில் கட்டி, அவரது உருவச்சிலையை வைத்து, தினமும் இரண்டு வேளை பூஜை செய்தும் வருகிறார்.
மேலும் தனது இல்லத்தின் பல இடங்களில் தேசிய தலைவர்களின் புகைப்படத்தை வைத்து மரியாதையை செய்து வருகிறார். இந்நிலையில், இவரின் ஒரு செயல் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் மோடி பிரதமராக வேண்டுமென வேண்டுதல் வைத்து, தனது விரலை துண்டித்த வர்ணேகர், விரலில் இருந்து வெளியேறிய ரத்தத்தைக் கொண்டு 'காளிமாதா மோடியைக் காக்க' என்றும் எழுதியுள்ளார்.
வர்ணேகர் கத்தியால் தன் விரலை வெட்டிக் கொள்ளும் காணொளியும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வர்ணேகர் தெரிவிக்கையில், "நம் தேசம், தேச மக்களையும், மற்றவர்களையும்விட நான் மூடியை தான் அதிகம் நேசிக்கிறேன். பிரதமராக மோடி வந்ததால்தான் நம் தேசம் வல்லரசு தேசமாக மாறும்" என்றார்.
English Summary
KARNATAKA BJP MODI Fan cut own finger