வழக்கறிஞர்களுடன் நட்பு பாராட்டுவதை தவிருங்கள்… நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
High Court instructs judges
அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கு சென்னை நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது,
நீதித்துறை நெறிமுறைகளை மாவட்ட நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.
நீதித்துறையின் பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மூலம் மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும்.
தாங்கள் பணியாற்றும் நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்களுடன் நெருக்கமான நட்புடன் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
தேவையில்லாமல் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுடன் செல்போனிலும் சேம்பரில் வைத்தும் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
மேற்கண்ட நெறிமுறைகளை அனைத்து நீதிபதிகளும் தீவிரமாக கடைபிடிக்காவிடில் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
High Court instructs judges