ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை! கிடைத்த உருக்கமான கடிதம்! - Seithipunal
Seithipunal


 

குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத், சூரத் பகுதியை சேர்ந்தவர் மணிஷ் சோலன்கி. இவர் பர்னிச்சர் வியாபாரி. இவரிடம் 35 தச்சர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இவரது மனைவி ரீட்டா. தந்தை கானு, தாய் ஷோபா, இவருக்கு திஷா, காவியா மற்றும் குஷால் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். 

மணிஷ் குடும்பத்தினர் 6 பேருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இந்நிலையில் கடையில் பணியாற்றி வந்த ஒருவர் மணிஷைவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். 

அவரை தொடர்பு கொள்ள முடியாததால் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டை திறந்து பார்த்த போது மணிஷ் தற்கொலை செய்து கொண்ட நிலையிலும் மற்ற 6 பேர் உயிரிழந்தும் கிடந்தனர். 

அவர்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது மணிஷ் தற்கொலை செய்து கொண்ட அறையில் கடிதம் ஒன்று கிடைத்தது. 

அதில், எங்களது தற்கொலைக்கு நிதி நெருக்கடி மட்டுமே காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்திய வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat same family 7 members committed suicide


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->