தன் மகளையே குத்தி கொடூரமாக கொன்ற தந்தை.,அதிர்ச்சி அடைய வைக்கும் காரணம் ..!
தன் மகளையே குத்தி கொடூரமாக கொன்ற தந்தை.,
கேரளாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன் தன் மகளை, தந்தை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜன்- சுமிதா தம்பதி, இவர்களது மகள் ஆதிரா (22). அங்குள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது மகளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு சாதியை சார்ந்த இந்திய ராணுவ இளைஞருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த நட்பு காதலாக மாறியுள்ளது.
இவர்கள் காதல் விவகாரம் ஆதிராவின் தந்தைக்கு தெரியவந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் அவர்களது காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மேலும் மாப்பிள்ளையின் வீட்டில் இருந்து வந்து பெண் கேட்டும் கூட மாப்பிள்ளை ராணுவ வீரராக இருந்தாலும், தலித் இனத்தவர் என கூறி கொடுக்க மாட்டேன் என்று சண்டை போட்டு இருக்கிறார்.
இதனால் அவர்களது காதல் விவகாரம் காவல் நிலையம் வரை சென்றுள்ளது. போலீசார் ஆதிரா மேஜர் என்பதனால் அவர்களது பெற்றோரை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
ஆனால் சில நாட்களுக்கு பின் ஆதிராவின் உறவினர்கள் மற்றும் அதிராவின் அம்மா பேசியதால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் அதிராவின் தந்தை. அதோடு திருமணத்தில் எந்த சம்பிரதாயமும் செய்ய மாட்டேன் எனவும் ,திருமணத்திற்கு பின் அவர்கள் வீட்டிலுருந்து யாரும் என் வீட்டிற்கு வர கூடாது என்றும் நிறைய நிபந்தனைகள் விதித்துள்ளார்.
பின் அவரது கல்யாணம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் ராஜனுக்கும் ஆதிராவிற்கும் பேசிக்கொண்டிருக்கும்போது ஏதோ சண்டை வந்துள்ளது. இதனால் கோபமடைந்த ராஜன் ஆதிராவை மோசமாக தாக்கி அடித்துள்ளார். பின் கத்தியால் பல முறை குத்தியுள்ளார்.
இதனால் அந்த பெண் அந்த இடத்திலேயே மயங்கி உயிருக்கு போராடி உள்ளார்.மேலும் உறவினர்களுடன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆதிரா மரணம் அடைந்துவிட்டார்.
இதனால் போலீசார் ஆதிராவின் தந்தை ராஜனை கைது செய்தனர்.
English Summary
The father who stabbed her daughter in a brutal manner, was the reason for shock.