குடும்ப தகராறு... 2 மகள்களை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர தந்தை..!
Father burnt 2 daughters by pouring petrol in Punjab
பஞ்சாப் மாநிலத்தில் குடும்ப தகராறில் இரண்டு மகள்களை பெட்ரோல் ஊற்றி தந்தை எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள பெரிங் கிராமத்தை சேர்ந்தவர் வித்யா ராம். இவரது மனைவி பூனம் சர்மா. இவர்களுக்கு 10 மற்றும் 16 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவியிடையே இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த வித்யா ராம் மனைவியை கொள்ளிக்கட்டையால் தாக்கியுள்ளார்.
மேலும், தனது இரண்டு மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதையடுத்து சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் தீயை அணைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பூனம் சர்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், இரண்டு மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த வித்யா ராமை கைது செய்தனர்.
English Summary
Father burnt 2 daughters by pouring petrol in Punjab