டெல்லிவாசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி : இனிமேல் டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தக்கூடாது..!!
டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.
டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.
உலகம் முழுவதும் காற்று மாறு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தலைநகர் டெல்லியில் தான் காற்று மாசு அதிகமாக உள்ளது.
அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசும், டெல்லி அரசும் எடுத்து வருகிறது. இதற்கு முன்பு ஆட்-ஈவன் என் திட்டத்தை டெல்லி அரசு சோதனை முறையில் அறிமுகம் செய்தது.
அதன்படி, ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை பதிவெண் கொண்ட வாகனங்கள் அடுத்தடுத்த நாட்களில் இயக்க வேண்டும். மாற்றி இயக்கினால் அபராதம் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், சோதனையுடன் அது நிறுத்தப்பட்டது. முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
அதே போன்று, தீபாவளியை டெல்லியில் பட்டாசுகளை வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், டெல்லி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. இதில், டெல்லி மாநகராட்சி மற்றும் மருத்துவமனைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
Diesel generator ban in Delhi