பிரியங்கா காந்தியை விமர்சனம் செய்து பாஜக மத்திய அமைச்சர் கூறிய ஒத்த வார்த்தை.! வெடித்த பெரும் சர்ச்சை.!
bjp minister teased priyanga gandhi
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடுதோறும் கட்சியினர் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருக்கும் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதியின் தேர்தல் பொறுப்பாளராக உள்ளார்.
அவர் ராசாராம் தொடங்குவதற்கு பூஜை, வழிபாடு என பிரயாக் ராஜில் இருந்து வாரணாசி வரை மூன்று நாள் யாத்திரை மேற்கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் செகந்திராபாத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சரும் கவுதம் புத்தா நகர் எம்.பி.யுமான மகேஷ் சர்மா பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை குறித்து விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
அபொழுது அவர், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பிரதமரைப் பார்த்து கண்ணடித்தார்.அதனால் அனைவராலும் விமர்சனம் செய்யப்பட்டார். அந்த 'பப்பு' (சிறுவன்) பிரதமராக ஆசைப்படுகிறார். இப்பொழுது மாயாவதி, அகிலேஷ் யாதவுடன் இந்த 'பப்பி'யும் (சிறுமி)யும் சேர்ந்து போட்டியில் இணைந்துள்ளார் என கூறியுள்ளார்.
இவ்வாறு பாஜகவினர் ராகுல் காந்தியை 'பப்பு' என்று விமர்சனம் செய்த நிலையில், தற்போது அவரது சகோதரி பிரியங்கா காந்தியை 'பப்பி' என மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
bjp minister teased priyanga gandhi