பஞ்சாயத்து தலைவர் வீட்டிற்குள் சென்றதால் முதியவருக்கு நேர்ந்த கதி : செருப்படி, எச்சிலை உண்ணவைத்தல் – அதிர்ச்சி வீடியோ
பீகாரில் ஒரு பஞ்சாயத்து தலைவர் வீட்டில் நுழைந்ததற்காக, முடி திருத்தும் தொழிலாளி ஒருவருக்கு செருப்படி கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் வேதனையாக, அவரது எச்சிலை அவரையே உண்ண வாய்த்த கொடுமையும் நடந்துள்ளது.
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் சொந்த மாவட்டமான பீகார்ஷரீப் மாவட்டத்தில் உள்ள அஜய்பர் ஊரில் இந்த தீண்டாமை கொடுங்கோன்மை அரங்கேறியுள்ளது.
அஜய்புர் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் சுரேந்திரா. இவரது வீட்டிற்கு கடந்த 18-ம் தேதி மகேஷ் தாக்கூர் என்ற முடி திருத்தும் தொழிலாளி புகையிலை கேட்பதற்காக சென்றுள்ளார்.
பஞ்சாயத்து தலைவர் வீட்டில் இல்லை என்பது தெரிந்தவுடன் அவர் வெளியே வந்துவிட்டார். வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தபோது அந்த முடிதிருத்தும் தொழிலாளி எப்படி வீட்டிற்குள் வரலாம் என்று பஞ்சாயத்து தலைவர் சுரேந்திரா கோபம் அடைந்துள்ளார்.
தனது அதிகாரத் திமிரை காட்டுவதற்காக அவர் உடனடியாக பஞ்சாயத்தை கூட்டி கொடூரமான தீர்ப்பு வழங்கினார். அதில் முடி திருத்தும் தொழிலாளியை பெண்கள் செருப்பால் அடிக்க வேண்டும் என்றும், அவர் எச்சிலை துப்பி அதனை நாக்கல் உண்ண வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இது தொடர்பாக வீடியோவும் வெளியாகி உள்ளது, அதில் 2 பெண்கள் அவரை தாக்குவதாகவும், அவர் எச்சிலை துப்பி அதனை நாக்கல் உண்ணுவதாகவும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நமது நாட்டில் உச்சபட்ச தீண்டாமை கொடுமை இன்னமும் நிலவுவது பற்றி ஏராளமான இளைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
English Summary
in a shocking incident a barber was forced to spit and lick his own saliva off the ground at biharsharif in nalanda of bihar