திடீர் போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


மத்திய அரசைட் கண்டித்து வருகிற பதினாறாம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

அகில இந்திய அளவில் மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சாா்பில் வரும் பிப்ரவரி16-ஆம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. 

இந்த நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில், போக்குவரத்து தொழிலாளர்களும் பங்கேற்பார்கள் என்று சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தால் ரயில்வே, தபால் உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

all trade unions protest in india against central govt


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->