மனைவி அமைய கொடுத்துவைக்க வேண்டும்..! கள்ளக்காதலியை மிரட்டி பணம் பறித்த கள்ளக்காதலன் மற்றும் அவனின் மனைவி.!!
மனைவி அமைய கொடுத்துவைக்க வேண்டும்..! கள்ளக்காதலியை மிரட்டி பணம் பறித்த கள்ளக்காதலன் மற்றும் அவனின் மனைவி.!!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சிவாஜிநகரை சார்ந்த பெண் அவரது கணவருடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் கணவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரின் சிகிச்சைக்காக அதே பகுதியை சார்ந்த இம்ரான்கான் (35) என்பவரிடம் பணம் கேட்டுள்ளார்.
இம்ரான் காணும் அந்த பெண்ணுக்கு பணஉதவி அளித்துள்ளார்., மேலும் அந்த பெண்ணுக்கு தக்க சமயத்தில் உதவியதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி., இருவரும் தனிமையில் சந்தித்து பலமுறை தாம்பத்தியம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில்., இம்ரான்கானுக்கு சீமா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில்., இம்ரான்கான் அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருந்த வீடியோ பதிவுகள் எனது அலைபேசியில் உள்ளது., பணம் தராவிட்டால் வீடியோ காட்சிகளை இணையதளங்களில் பதிவேற்றிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதற்கு பயந்த பெண் அவர்களுக்கு தற்போது வரை ரூ.8 இலட்சம் வரை வழங்கியுள்ளார். மேலும் இம்ரான்கான் அதிகப்பணம் கேட்டு மிரட்டியுள்ளதால் பதறிய அவர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இம்ரான்கானை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., இவர் திருமணம் முடித்த பெண்ணிடம் தனது கள்ளக்காதல் குறித்து கூறியுள்ளார்.
இவர்கள் இருவரின் திட்டப்படி அந்த பெண்ணிடம் ரூ.8 இலட்சம் மிரட்டி வசூலிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து மேலும் தனது விசாரணையை காவல் துறையினர் தொடர்ந்து வருகின்றனர்
English Summary
A ILLEGAL LOVER TORTURED HIS LOVER TO GIVE MONEY.