4 மாடியில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை.! தாயாய் அரவணைத்து மரக்கிளை காப்பாற்றியும்., மருத்துவமனையில் போராட்டம்.!!
A CHILD SLIPPED FROM 4 TH FLOOR LUCK IS SAVING HER LIFE
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இருக்கும் கோவண்டி கிழக்கு பகுதியில் இருக்கும் பி.எஸ்.தேவாசி சாலையில் கோபி கிருஷ்ணன் என்னும் அடுக்குமாடி கட்டிடமானது இருக்கிறது. இந்த கட்டிடத்தில் உள்ள நான்காவது மாடியில் அஜித் பார்கடே - ஜோதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் இருவருக்கும் ஒரு வயதுடைய அதர்வா பார்கடே என்ற மகன் இருக்கிறார். நேற்று காலையில் வீட்டின் அறையில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை., ஜன்னல் வழியாக வெளியே எட்டி பார்த்துள்ளான்.
அந்த வீட்டின் அறையில் ஜன்னல் இல்லாத காரணத்தால் அங்கிருந்து தவழ்ந்து வந்த குழந்தை., எதிர்பாராத விதமாக நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்தான். அந்த நேரத்தில் அவனுக்கு உதவிய அதிஷ்டத்தின் மூலமாக., வீட்டின் சுவற்றை ஒட்டி இருந்த மரத்தின் கிளையில் சிக்கி., கிளை வளைந்து கொடுத்ததும் அவன் நேரடியாக தரையில் விழாமல் சிறு காயத்துடன் தப்பித்தான்.
கீழே விழுந்ததும் பலத்த குரல் அழுத அவனின் குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவனை சூலவே., வீட்டின் உள்ளே இருந்த குழந்தையை காணாமல் ஜன்னல் திறந்திருப்பதை கவனித்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தார்கள் கீழே பார்த்த போது அங்கு மக்கள் அவனை சூழுந்து இருந்ததால் பெரும் பதற்றமடைந்தனர்.
பதறிய படி கீழே சென்ற குடும்பத்தார்கள் குழந்தை சிறிய காயத்துடன் அழுவதை கண்டு இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகி., உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை சிகிச்சை பெற்று வருவதால் குடும்பத்தார்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
மேலும்., குழந்தை அபாய கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து., அந்த குடியிருப்பு வாசிகள் அனைவரும் குழந்தை உடல் நலம் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்., இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A CHILD SLIPPED FROM 4 TH FLOOR LUCK IS SAVING HER LIFE