#BigBreaking || ஓடும் ரயிலில் ஆர்.பி.எஃப் வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருந்து மும்பைக்குச் சென்ற பயணிகள் ரயிலில் ஆர்.பி.எஃப் வீரர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஆர்.பி.எஃப் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். 

12956 எண் கொண்ட ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பி5 பெட்டியில் எஸ்கார்ட் பணியில் இருந்த ஆர்பிஎஃப் சேத்தன் எஸ்கார்ட் இன்சார்ஜ் ஏஎஸ்ஐ டிகா ராம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பால்கர் ரயில் நிலையத்தை இன்று காலை 7 மணி அளவில் கடந்த போது ஆர்.பி.எஃப் வீரர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ஆர்பிஎஃப் ஏஎஸ்ஐ டிகா ராம் மற்றும் மூன்று பயணிகளை சுட்டு விட்டு சேத்தன் தஹிசார் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்துள்ளார். அவரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 killed in firing by RPF soldier on moving train


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->