#BREAKING | அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 2 விமானிகளை தேடும் பணி தீவிரம் - Seithipunal
Seithipunal


அருணாச்சல பிரதேசத்தின் மண்டலா மலைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

அருணாச்சலப் பிரதேச மாநிலம் போம்டிலா அருகே பறந்து கொண்டிருந்த இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர், திடீரென காலை 09:15 மணியளவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்து, போம்டிலாவின் மேற்கே உள்ள மண்டலா அருகே உள்ள மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகள் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இந்நிலையில் இரண்டு விமானிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அருணாச்சல பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உட்பட 5 பேர் உயிரிழந்ததது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 Pilots Missing After Army Cheetah Helicopter Crashes In Arunachal pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->