கோவில் பிரசாதம் சாப்பிட்ட இருவர் பலி, 11 பேர் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில்  சிக்கபல்லபுரா நகரில் கங்கம்மா தேவி என்ற கோவில் அமைந்துள்ளது.  இங்கு அணைத்து வெள்ளிக்கிழமைகளும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் வேண்டுதலின் பேரில் சிலர் பிரசாதம் தயாரித்து கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இவ்வாறு கடந்த வெள்ளியன்று, அடையாளம் தெரியாத 2 பெண்கள் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக அல்வா வழங்கியுள்ளனர்.
 
இந்நிலையில் இந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிட்ட கவிதா  என்ற பெண் தொடர்ந்து வாந்தி எடுத்து உள்ளார்.  அதனால் அவரது உடலில் நீரிழப்பு ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று உயிரிழந்து விட்டார்.  அதனை தொடர்ந்து நேற்று இரவு சரஸ்வதி என்ற 59 வயது பெண் உயிரிழந்துள்ளார் த் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் உயிரிழந்த கவிதாவின் கணவர் கங்காதர், அவரது மகள்கள் கனவி, சரணி, கங்காதரரின் சகோதரர் ராஜு அவரது மனைவி ராதா உட்பட 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு பிரசாதம் வழங்கிய 2 பெண்களை கைது செய்தனர். மேலும் இதனை போன்ற அசம்பாவித சம்பவங்கள்  மீண்டும் நடைபெறாதவாறு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1women dead after eating temple prasadam in karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->