இப்படி சாப்பிட்டால் கேன்சர் அபாயம்.! உயிர் போகும் ஆபத்து.!  - Seithipunal
Seithipunal


பலரும் நேரமின்மை காரணமாக அந்தந்த நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வது இல்லை. நமது உடல் ஒரு கடிகாரம் போன்றது. அந்த உடல் கடிகாரமானது சுழற்சிக்கு அப்பாற்பட்டு இயங்கினால் நமக்கு பல்வேறு வியாதிகள் ஏற்படக்கூடும். 

எனவே, உடல் கடிகாரம் சரியாக இயங்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். காலை, மதியம் உணவு நேரத்தில் எடுத்துக் கொள்வது அவசியம். பலரும் காலை உணவை தாமதப்படுத்தி 11 மணியிலிருந்து 12 மணிக்குள் சாப்பிடுகிறார்கள். 

மதிய உணவை மூன்று அல்லது நான்கு மணிக்கு சாப்பிடுகிறார்கள். அவர்கள் இரவு நேரத்தில் 10 - 11 மணிக்கு சாப்பிடுகின்றனர். இதுபோல நேரம் தாழ்த்தி சாப்பிட்டு விட்டு உடனே உறங்க செல்வது பெரும் ஆபத்தாக முடியும்.

இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால் புற்று நோய் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இது குறித்த சமீபத்திய பார்சிலோனா ஆய்வில் வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அன்றாடம் இரவு ஒன்பது மணிக்கு பின் சாப்பிட்டுவிட்டு உணவிற்கும் உறக்கத்திற்கும் இடையில் இரண்டு மணி நேரம் இடைவெளி விடாமல் இருப்பவர்களுக்கு மற்ற நபர்களை காட்டிலும் புற்றுநோய் அபாயமானது அதிகப்படியாக இருப்பதாக அந்த பார்சிலோனா ஆய்வில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dont late Night Food In Tamil


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->