இதை மட்டும் 5 நிமிடம் செய்யுங்கள் : பிறகு இதய நோயிலிருந்து கால் வீக்கம் வரை அண்டவே அண்டாது..!!
இதை மட்டும் 5 நிமிடம் செய்யுங்கள்
உடலை வளைத்து வேலை செய்யும் போது இல்லாத வியாதிகள் எல்லாம், இன்று ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் போது அனைவரையும் தொற்றிக்கொண்டுள்ளது
அதற்காக மருத்துவமனைக்கு சென்று எக்கச்சக்கமாக செலவு செய்து வருகின்றனர். ஆனால், காலையில் எழுந்ததும் ஒரு சில பயிற்சிகளை செய்தாலே பெரும்பாலான நோய்கள் பறந்துவிடும்.
அந்த வகையில் காலையில் இந்த ஒரு பயிற்சியை மட்டும் சேய்தால் போதும், இதய நோய், கால் வலி, வீக்கம் என பலவகையான நோய்கள் குணமாகும்.
தினமும் காலையில் எழுந்தவுடன், தண்ணீர், தேநீர் எதுவும் பருகாமல் வெறும் வயிற்றில் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். சுவரில் கால்களை உயர்த்தி 90 டிகிரிக்கு உடலை வளைத்து 5 நிமிடம் இருக்க வேண்டும்.
அதாவது : போன்ற வடிவில் உடல் வளைந்து இருக்க வேண்டும். அப்போது, மூச்சை மெதுவாக முழுமையாக உள்ளே இழுத்து மெதுவாக வெளிவிட வேண்டும்.
இப்படி செய்வதால், உடலில் இதய துடிப்பு சீராகி, ரத்த ஓட்டம் சீராக அமையும். அதனால், கால் வலி, வீக்கம் போன்றவை சரியாகும். கால்களை மேல் நோக்கி உயர்த்தி இருப்பதால், குடலில் உள்ள அடைப்புகள் நீங்கும்.
இந்த பயிற்சியை புதிதாக செய்பவர்கள் குறைந்த நேரம் செலவு செய்தால் போதும். அடுத்தடுத்த நாட்களில் நேரத்தை அதிகரித்தால் பயிற்சி எளிதாக இருக்கும்.
English Summary
Do it 5 minutes heart problem will leave