குலதெய்வ படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? - Seithipunal
Seithipunal


1. நான் துலாம் ராசி, மேஷ லக்னம். 11-ம் இடத்தில் புதன், சூரியன் மற்றும் குரு உள்ளது. புதன் திசை நடந்தால் என்ன பலன்? 

புதிய முயற்சிகளில் எண்ணிய முன்னேற்றம் உண்டாகும்.

மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். 

உத்தியோகத்தில் மாற்றம் மற்றும் இலாபகரமான சூழல் உண்டாகும்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. குலதெய்வ படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

குலதெய்வ படத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்.

3. சிம்ம ராசியில் சந்திரனும், சுக்கிரனும் இணைந்து இருந்தால் என்ன பலன்?

தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

சுகமான நித்திரை உடையவர்கள்.

தன்னை என்றும் உயர்வாக எண்ணக்கூடியவர்கள்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. கழுகு என்னை கொத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

கழுகு உங்களை கொத்துவது போல் கனவு கண்டால் எதிர்பாராத விரயச் செலவுகள் ஏற்படும்.

5. ரிஷப ராசி, மீனம் லக்ன உடையவர்களுக்கு என்ன பலன்? 

எதற்கும் உணர்ச்சிவசப்படமாட்டார்கள்.

ஞாபக சக்தி கொண்டவர்கள்.

சகிப்புத்தன்மை உடையவர்கள். 

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. எனக்கு பேய் உதவி செய்வது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

பேய் உதவி செய்வது போல் கனவு கண்டால் எதிர்ப்புகளின் மூலம் திட்டமிட்ட பணியில் சில காலதாமதம் உண்டாகும்.

7. அர்ச்சனை செய்யும் தேங்காய் அழுகி இருந்தால் என்ன பலன்?

அர்ச்சனை செய்யும் தேங்காய் அழுகி இருந்தால் மாற்று தேங்காய் வாங்கி அர்ச்சனை செய்து கொள்ளவும்.

செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்படவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kulatheyva padaththai veettil vaiththu vazhipadalama


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->