தல,தளபதி மற்றும் சூப்பர் ஸ்டார் மூவருக்கும் பொதுவான ஒரு பிரச்சனை இது தானாம்!!
thala thalapathy and rajith are faced the same problem about fans
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாக்கி கொண்டிருக்கும் ‘தளபதி 63’ படம் ஏஜிஎஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, அட்லி இயக்குகிறார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இரண்டு கதாநாயகிகள் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது. யோகி பாபு, டேனியல் பாலாஜி, கதிர் ஆகியோர் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு பூஜை முடிந்து தற்பொழுது பிரமாண்டமான செட் போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது. இதறகான ஷூட்டிங் பின்னிமில்லில் நடந்த நிலையில் பின்னி மில் முழுவதும் விஜய் ரசிகர்கள் சூழ்ந்துவிட்டனர். ரசிகர்களை பார்த்து கைகட்டி விஜயை சூழ்ந்து கொள்ள கூட்டம் காரணமாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுபோலவே நடிகர் அஜித்தும், தமிழக கான்சப்ட்டை கொண்ட படமாக இருந்தாலும், அதை செட் அமைத்து ஆந்திராவில் தான் படம் நடிப்பாராம். வீரம் படத்தில் வரும் ஒட்டன்சத்திரம் கதை தான் என்றாலும் படம் எடுக்கப்பட்டது என்னவோ ஆந்திராவில் தானம்.
இதே வரிசையில் தான் விவேகம், வேதாளம் மற்றும் தற்பொழுது வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் விசுவாசம் படம் என கதை தமிழக அமைப்பில் எடுக்கப்பட்ட போதும், ஆந்திராவில் செட் அமைத்து எடுக்கப்பட்ட படம் தான்.
இவ்வாறு தான், என்னை அறிந்தால் படத்தின் பல காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்ட போது, அஜித்துடன் நடித்த அருண் விஜய் 'நானும் அஜித்தும் ஷூட்டிங் இடைவேளையில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அஜித் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.
சிலர் அஜித் ரசிகர்கள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார்கள் என்று அஜித்திடம் சொன்னார்கள். அதற்கு அவர், என் ரசிகர்கள் அப்படியெல்லாம் நடந்துகொள்ள மாட்டார்கள் என்று கூறிவிட்டு அங்கு சென்று ரசிகர்களை அமைதியாக இருக்க செய்தார்'என்று கூறினார்.
இதனை தொடர்ந்து, நடிகர் மன்சூர் அலிகான், "அஜித் மிகவும் நல்ல மனிதர்தான். தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் அவருக்குதான் இருக்கிறார்கள். ஆனால், அவர் தன் படத்தின் ஷூட்டிங்கையெல்லாம் வெளியூரில் வைக்கிறார். இதனால் வெளியூர் தொழிலாளர்கள்தான் பயனடைகிறார்கள். தமிழ் சினிமா தொழிலாளர்கள் வேலைவாய்ப்பையிழக்கிறார்கள். அவர் தமிழ்நாட்டில் தன் ஷூட்டிங்கை நடத்த வேண்டும்" என்று பேசினார்.
இதுபோலவே, மெர்சல் திரைப்படத்தில் வருகின்ற மதுரையில் நடக்கும் பகுதி முழுவதும் செட் போட்டு எடுக்கப்பட்டது தான். மேலும், நடிகர் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மதுரை காட்சிகளும் சென்னைக்கு அருகில் செட் போட்டு படமாக்கப்பட்டவை தான். வெளிநாடுகளில் எடுக்கப்படும் படங்களுக்கு ரசிகர்களின் தொல்லை காரணமாக செட் அமைத்து தான் எடுக்கப்படுகின்றதாம்.
இதே வரிசையில் தற்பொழுது கேரள சென்ற விஜய் சேதுபதியையும் திக்குமுக்காட செய்துள்ளனர். இதற்கு காரணம் '96' மலையாள வெர்ஷனின் வெற்றி தான் என்கின்றனர். ஆனால், எவ்வளவு மக்கள் இருந்தாலும் அதை கூலாக ரசிகர்களின் செல்பிக்கு போஸ் கொடுத்து செல்வதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஈடு அவரே தான்.
English Summary
thala thalapathy and rajith are faced the same problem about fans