நான் இவரைதான் திருமணம் செய்ய போகிறேன்..! மனம் திறந்தார் ஸ்ரீ ரெட்டி
கடந்த காலத்தில் நடந்த எல்லாவற்றையும் தெரிந்து என்னை விரும்பி ஏற்றுக் கொள்ள யாரேனும் முன்வந்தால் திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் நடந்த எல்லாவற்றையும் தெரிந்து என்னை விரும்பி ஏற்றுக் கொள்ள யாரேனும் முன்வந்தால் திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகை, ஸ்ரீரெட்டி நடத்திய அரை நிர்வாண போராட்டம் தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபல தெலுங்கு நடிகர் உட்பட பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீதும் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரபல தமிழ் இயக்குநர் மீதும் குற்றம் சாட்டினார்.
முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என தமிழ் சினிமா ஆளுமைகளின் மீது தொடர்ந்து ஸ்ரீரெட்டி பாலியல் புகாரை கூறி வருது தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இளம் நடிகர் சந்தீப் பெயரையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். பிரபல நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி, தமிழில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஆதி ஆகியோரும் ஸ்ரீரெட்டியின் பட்டியலில் சிக்கினர்.
இந்நிலையில், தனது கடந்தகால நிகழ்வுகளை அறிந்து, தம்மை விரும்பி யாரேனும் ஏற்று கொள்ள முன்வந்தால், அவரை திருமணம் செய்துகொள்ள தயார் என நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.
English Summary
Sri Reddy Taliking About Who Marriage Me